என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் அருகே பொதுப்பணித்துறை நீர்ப்பாசன உதவியாளர் மர்ம மரணம்
Byமாலை மலர்9 Sep 2019 4:21 PM GMT (Updated: 9 Sep 2019 4:21 PM GMT)
நொய்யல் அருகே பொதுப்பணித்துறை நீர்ப்பாசன உதவியாளர் மர்மமான முறையில் இறந்தார்.
வேலாயுதம்பாளையம்:
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள சிறுமயன்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமலஹாசன் (வயது 44). இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஆற்றின் பொதுப்பணித்துறையில் நீர்ப்பாசன உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இவர் தினமும் திருச்சியில் இருந்து கரூருக்கு வேலைக்கு சென்று வருவது வழக்கம். மேலும் குடிபழக்கத்திற்கும் அடிமையாகி இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் வேலாயுதம்பாளையத்தில் உள்ள ஒரு விநாயகர் கோவில் அருகே கமலஹாசன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கமலஹாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X