என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பாரிமுனை லாட்ஜில் 3 கிலோ தங்கத்துடன் 2 பேர் பிடிபட்டனர்
ராயபுரம்:
பாரிமுனை மன்னார் தெரு பகுதியில் உள்ள தனியார் லாட்ஜில் இன்று போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அறை ஒன்றில் தங்கியிருந்த 2 வாலிபர்களின் சூட்கேசில் ஏராளமான தங்க நகைகள் இருந்தது. இதுகுறித்து கேட்டபோது வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த பிஜு, ஸ்பிஜின் என்பது தெரியவந்தது. இவர்கள் இன்று காலைதான் கேரளாவில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னைக்கு வியாபார ரீதியாக நகைகளை கொண்டு வந்ததாக கூறினர்.
ஆனால் அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை. இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து மொத்தம் 3 கிலோ நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகைகளுடன் கேரள வியாபாரிகள் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்