search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    சோழவந்தானில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் கடத்தல்

    2 குழந்தைகளுடன் இளம்பெண்ணை கடத்திச் சென்ற கொடைக்கானல் நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாவட்டம், சோழவந்தான் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கனவாய்பீர். இவரது மனைவி ரிஷ்வானா (வயது 32). இவர்களுக்கு ஷெரின் பாத்திமா (11), அரிஷ்கலாம் (14) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 5-ந் தேதி வீட்டில் இருந்த ரிஷ்வானா மற்றும் 2 குழந்தைகளையும் கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ரபீக் முகம்மது என்பவர் கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து சோழவந்தான் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை, குழந்தைகளுடன் கடத்திச் சென்ற நபரை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×