என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் கத்தியால் தாக்கி செல்போன்கள் பறிப்பு
மதுரை:
திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது 28). இவர் மதுரை முத்து மேம்பாலம் பகுதியில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மணிகண்டனை மிரட்டினர்.
மேலும் அவரை கத்தியால் வெட்டிவிட்டு, செல்போனை பறித்துச் சென்றதாக ஜெய்ஹிந்து புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயம் அடைந்த மணிகண்டன் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சிந்தாமணி பர்மா காலனியைச் சேர்ந்த முருகவேல் (40) கீரைத்துறை பகுதியில் நடந்து சென்றார். அப்போது சிலர் வழிமறித்து வாளால் வெட்டியதோடு செல்போனையும் பறித்துச் சென்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்வேயர் காலனி காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி கார்த்தீஸ்வரி (44) முனிச்சாலையில் நடந்து சென்றபோது, மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து நகையை பறித்துச் சென்றனர்.
இது குறித்து விளக்குத் தூண் போலீசில், கார்த்தீஸ்வரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடக்கு ஆவணி மூல வீதியைச் சேர்ந்த சக்திவேல் மனைவி ஆனந்தலட்சுமி (41) வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார்.
அப்போது யாரோ வீடு புகுந்து 5 பவுன் நகையை திருடிச் சென்று விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்