என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அடகு வைத்த நகையை கணவர் திருப்பி தராததால் இளம்பெண் தற்கொலை
கோவை:
கோவை குனியமுத்தூர் அருகே உள்ள இடையர்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பையா. இவர் மதுக்கரை சுங்கசாவடியில் பணம் வசூலிப்பவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பேச்சியம்மாள் என்கிற சந்தியா (வயது 28). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மகனுக்கு பள்ளி கட்டணம் செலுத்துவதற்காக சுப்பையா தனது மனைவி அணிந்து இருந்த கம்மலை அடகு வைத்து பணம் கட்டினார். கம்மலை அடகு வைத்து நீண்ட நாட்களாக ஆகி விட்டதாலும், உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாலும் கம்மலை திருப்பி தரும்படி சந்தியா தனது கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் தற்போது கையில் பணம் இல்லாததால் தற்போது திருப்பி தரமுடியாது என சுப்பையா கூறி விட்டு வேலைக்கு சென்றார்.
இதனால் மனவேதனை அடைந்து சந்தியா வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சந்தியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்