search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    திருமணமாகாத விரக்தியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலி

    இடையர்பாளையம் அருகே திருமணமாகாத விரக்தியில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை இடையர்பாளையம் அருகே உள்ள டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 44). கட்டிட தொழிலாளி. திருமணம் ஆகவில்லை . இதனால் மனவேதனை அடைந்த செந்தில்குமார் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.

    இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த செந்தில்குமார் மயங்கி கீழே விழுந்து இறந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து செந்தில் குமாரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×