என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
Byமாலை மலர்8 Sep 2019 4:33 PM GMT (Updated: 8 Sep 2019 4:33 PM GMT)
தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் ரமேஷ் (வயது 36). தையல் தொழிலாளி. இவருக்கு தேவிகா (34) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர்.
ரமேசுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்த ரமேசை தேவிகா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ரமேஷ் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி ராஜூவ்காந்தி நகரை சேர்ந்தவர் செல்வம் மகன் ஞானபிரகாசம் (25). மீனவர். இவரது திருமணத்துக்கு வீட்டில் வரன் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் விருப்பம் இல்லாத ஞானபிரகாசம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X