search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலி

    ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரப்பரெட்டி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60).

    இவர் மைத்துனர் பாஸ்கருடன் மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டை வந்தார். வீட்டு உபயோக பொருட்கள் வாங்கி கொண்டு பின்னர் இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

    பூண்டி அருகே மைலாப்பூர் பகுதியில் உள்ள விநாயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது வேகத் தடையில் ஏறி இறங்கியபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியது.

    இதில் தடுமாறிய ஜெயலட்சுமி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஜெயலட்சுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயலட்சுமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பென்னாலூர்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் அழகேசன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    Next Story
    ×