என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயம்
Byமாலை மலர்7 Sep 2019 9:33 AM GMT (Updated: 7 Sep 2019 9:33 AM GMT)
தக்கலை அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் மாயமானதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தக்கலை:
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு அஞ்சு வண்ணம் பகுதியை சேர்ந்தவர் சாஜகான் (வயது 60). இவரது மகள் அலிபாத்திமா.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை (8-ந்தேதி) திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அலிபாத்திமா கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கடைக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான புதுபெண் அலிபாத்திமாவை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
தக்கலை முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகள் ஜெனிதா (வயது 29).
இவர் கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோருடன் இருந்துவந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். மகள் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மகள் ஜெனிதா மாயமாகி இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
தக்கலையை அடுத்த திருவிதாங்கோடு அஞ்சு வண்ணம் பகுதியை சேர்ந்தவர் சாஜகான் (வயது 60). இவரது மகள் அலிபாத்திமா.
இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை (8-ந்தேதி) திருமணம் நடக்க இருந்தது. இந்த நிலையில் அலிபாத்திமா கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை தேடி கடைக்குச் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.
இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணுகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மாயமான புதுபெண் அலிபாத்திமாவை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
தக்கலை முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மகள் ஜெனிதா (வயது 29).
இவர் கணவருடன் கோபித்துக் கொண்டு பெற்றோருடன் இருந்துவந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். மகள் மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் மாலையில் அவர்கள் வீடு திரும்பிய போது வீட்டில் இருந்த மகள் ஜெனிதா மாயமாகி இருந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை உறவினர்கள் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். எங்கும் அவர் இல்லாததால் தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X