என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
முதல்-அமைச்சரின் வெளிநாட்டு பயணம் வரவேற்கத்தக்கது - விஜயபிரபாகரன்
பழனி:
தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். அடிவாரத்தில் இருந்து மின்இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர், அங்கு சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் அவர் தங்கத்தேர் இழுத்து வழிபட்டார். அவருடன் மாவட்ட செயலாளர் பாலு, பழனி நகர செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், விஜயகாந்த் பூரணநலம் பெற வேண்டி பழனி முருகன் கோவிலுக்கு வந்து தங்கரதம் இழுத்து வழிபட்டோம். எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தே.மு.தி.க. தயாராக உள்ளது.
தமிழகத்தின் நன்மைக்காக முதல்-அமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது வரவேற்கத்தக்கது. இந்திய பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது என்று குறித்து வதந்தி பரப்பப்படுகிறது என்றார்.
தொடர்ந்து ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்புகையில், அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்