search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட்
    X
    ஐகோர்ட்

    பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது - ஐகோர்ட்

    பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    பாலியல் தொல்லைக்கு உள்ளானவரை மீண்டும் பணியில் சேர்க்கும்படி தொழிலாளர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் இன்று உத்தரவிட்டார். 

    அப்போது அவர் கூறுகையில், பாலியல் தொல்லையில் ஈடுபட்டவரை பணிநீக்கம் செய்த தொழிற்சாலை நிர்வாகத்தின் நடவடிக்கை சரியே. 
    பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களுக்கு கருணை காட்ட முடியாது. பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறல். 

    பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை என தெரிவித்தார்.
    Next Story
    ×