என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? - செயற்குழு கூட்டத்தில் கேஎஸ் அழகிரி ஆவேசம்
Byமாலை மலர்6 Sep 2019 10:10 AM GMT (Updated: 6 Sep 2019 10:10 AM GMT)
காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்குநேரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழக தலைவர் கே எஸ் அழகிரி, தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
கன்னியாகுமரி:
நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதைப் பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா?
மற்ற கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது.
குறைந்த பட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா?
தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும். தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர் நாடி. இங்கு கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X