search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேஎஸ் அழகிரி
    X
    கேஎஸ் அழகிரி

    தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? - செயற்குழு கூட்டத்தில் கேஎஸ் அழகிரி ஆவேசம்

    காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்குநேரியில் நடந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய தமிழக தலைவர் கே எஸ் அழகிரி, தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
    கன்னியாகுமரி:

    நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியுமா என்பதைப் பற்றி விவாதம் நடத்தவே இந்த கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருப்பது ஏன்? நம்மால் தனித்து நின்று வெற்றி பெற முடியாதா?

    மற்ற கட்சிகளைப் போல காங்கிரஸ் கட்சி கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது. கட்டுப்பாடு இல்லாத இயக்கம் வெற்றி பெறாது.
    குறைந்த பட்சம் தெருவில் நடக்கும் தேர்தலிலாவது நாம் வெற்றி பெற முடியுமா?

    தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றால் மட்டுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்ய முடியும். தென் தமிழகம் என்பது காங்கிரஸ் கட்சியின் வேர், உயிர் நாடி. இங்கு கூட்டணியின்றி காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
    Next Story
    ×