search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காசிமேட்டில் வழிப்பறி கொள்ளையர்கள் 5 பேர் கைது

    காசிமேட்டில் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், செல்போன் மற்றும் 2½ பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
    ராயபுரம்:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபுராஜ். இரும்பு கடையில் வேலை பார்க்கும் இவர் காசிமேட்டில் நடந்த உறவினர் திருமணத்துக்கு வந்திருந்தார். அதிகாலையில் காசிமேடு ஜி.எம்.பேட்டை பகுதியில் வந்தபோது பாபுராஜின் கழுத்தில் அணிந்திருந்த 2½ பவுன் தங்க சங்கிலியை 3 மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

    இதுகுறித்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக காசிமேடு ஜி.எம்.பேட்டையில் மறைந்திருந்த மதன், சந்தோஷ், சூர்யா, சுந்தர் உள்பட 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள், செல்போன் மற்றும் 2½ பவுன் தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×