search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷம்
    X
    விஷம்

    பூதலூர் அருகே வி‌ஷம் குடித்து முதியவர் தற்கொலை

    பூதலூர் அருகே தீராத வயிற்று வலி காரணமாக மனமுடைந்த முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள வேலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (வயது70). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்துள்ளது. சிகிச்சை பெற்றும் குணமாகாததால் மனமுடைந்து சம்பவத்தன்று மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கினார்.

    உடன் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் மணியரசன்(37) பூதலூர் போலீசில் கொடுத்த புகான்பேரில் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    Next Story
    ×