என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் சாணிப்பவுடர் குடித்து இளம்பெண் தற்கொலை
கோவை:
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள பெரிய மாதம்பளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் அந்த பகுதியில் காலடி மிதி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (வயது 29).
இவர்களுக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 5 வயதில் ஒரு மகன் உள்ளார்.
சம்பவத்தன்று கோமதி தனது கணவரிடம் தனது உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லுமாறு கூறி உள்ளார். ஆனால் தங்கராஜ் அழைத்து செல்லவில்லை என கூறப்படுகிறது.
இதில் மனவேதனை அடைந்த கோமதி வாழ்க்கையில் விரக்தி அடைந்து சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரமடையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கோமதி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமான 6 வருடத்தில் கோமதி தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
இதேபோல் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி அழகர் காலனியில் வசித்து வந்தவர் பிரமோத் (வயது 35). நேற்று மாலை பிரமோத் வாயில் நுரை தள்ளியபடி வீட்டில் கிடந்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ் பெக்டர் ஹரீஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் பிரமோத் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரமோத்தின் வீட்டின் பின்புறம் அவரது மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது. பிரமோத் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்