search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    ராஜபாளையத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை

    ராஜபாளையத்தில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற மர்ம மனிதர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் சங்கரன்கோவில் ரோட்டில் புதிய பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாகச் சென்றவர்கள் இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் கொலையுண்ட வாலிபர் யார்? என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தது யார்? என்று தீவிர விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டித்தெருவைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. அவருக்கு இன்னும் திருமண மாகவில்லை.

    கூலி தொழில் செய்து வந்த சதீஷ்குமார் என்ன காரணத்துக்காக கொலை செய்யப்பட்டார்? என்பதை அறிய தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெறுகிறது.

    Next Story
    ×