என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் பட்டதாரி வாலிபர் பலி
Byமாலை மலர்3 Sep 2019 12:21 PM GMT (Updated: 3 Sep 2019 12:21 PM GMT)
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகன விபத்தில் படுகாயம் அடைந்த பட்டதாரி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகணம்பட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பவன்சாய் (எ) ஹரி. கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த பவன்சாய் நேற்று தனது உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு, வீட்டிற்குசென்று தனது தாய் சாந்தியை அழைத்துக்கொண்டு பாலக்கோட்டில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். அப்போது தும்பலஅள்ளி அருகே செல்லும் போது திடீரென குறுக்கே வந்த மற்றொரு இருசக்கர மோட்டார் சைக்கிள் பவன்சாய் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தாய் மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த பவன்சாயை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயம் அடைந்த சாந்தி மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஆகிய இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைசெய்து அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X