என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரையில் மாடியில் இருந்து விழுந்த பெண் பலி
மதுரை:
மதுரை பேச்சியம்மன் படித்துறை பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ஆனந்தவள்ளி (வயது 33).
இவர் நேற்று வீட்டில் துவைத்த துணிகளை காயப்போடுவதற்காக மாடிக்கு சென்றார். அப்போது ஆனந்த வள்ளிக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய அவர், மாடியில் இருந்து விழுந்தார்.
அக்கம், பக்கத்தினரும் குடும்பத்தினரும் ஆனந்த வள்ளியை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஆனந்தவள்ளி பரிதாபமாக இறந்தார். இது குறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநகர் நெல்லையப்ப புரத்தைச் சேர்ந்தவர் பால சண்முகநாதன். இவரது மனைவி மணியம்மாள் (வயது 52).
இவர் செனாய் நகரில் உள்ள ஜவுளிக்கடைக்குச் சென்றார். கடைவாசலில் திடீரென மணியம்மாள் மயங்கி விழுந்தார். அவரை 108 ஆம்புலன்சு மூலம் அக்கம் பக்கத்தினர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மணியம்மாள் பரிதாபமாக இறந்தார். மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்