என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதி லாட்ஜ் உரிமையாளர் பலி
Byமாலை மலர்3 Sep 2019 10:07 AM GMT (Updated: 3 Sep 2019 10:07 AM GMT)
வத்தலக்குண்டு அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் லாட்ஜ் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு அருகில் உள்ள பங்களாபட்டி நூத்துலாபுரம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது58). இவர் போலீஸ் நிலையம் எதிரே லாட்ஜ் வைத்து நடத்தி வந்தார். மேலும் நிலக்கோட்டை பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அணைப்பட்டியில் இருந்து அய்யம்பாளையம் நோக்கி வந்த ஒரு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தார். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
வத்தலக்குண்டு அருகில் உள்ள பங்களாபட்டி நூத்துலாபுரம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது58). இவர் போலீஸ் நிலையம் எதிரே லாட்ஜ் வைத்து நடத்தி வந்தார். மேலும் நிலக்கோட்டை பஜாரில் நகைக்கடை வைத்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் வட்டார தலைவராகவும் இருந்து வந்தார். நேற்று இரவு வியாபாரம் முடித்து விட்டு தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அணைப்பட்டியில் இருந்து அய்யம்பாளையம் நோக்கி வந்த ஒரு கார் இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜசேகர் துடிதுடித்து உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்தார். தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X