என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளித்த மாணவன் சுழலில் சிக்கி பலி
கும்பகோணம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த நாச்சியார்கோவில் குமாரமங்கலம் முடவன் தெருவை சேர்ந்தவர் பாலு. இவரது மகன் தினேஷ்குமார் (வயது 15). அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் அருண் (15), கணேசன் மகன் சூர்யா (14).
நண்பர்களான இவர்கள் 3 பேரும் நாச்சியார்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் தினேஷ்குமார், அருண் ஆகியோர் 11-ம் வகுப்பு படித்து வருகின்றனர். அதே பள்ளியில் சூர்யா 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று விடுமுறை என்பதால் மதியம் தினேஷ் குமார், அருண், சூர்யா ஆகியோர் குமாரமங்கலத்தில் உள்ள அரசலாற்று குளிக்க சென்றனர்.
அப்போது ஆற்றில் சுழலில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். உடனே காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று தண்ணீரில் தத்தளித்தப்படி கூச்சல் போட்டனர். இதனால் சத்தம் கேட்டு அப்பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்து ஆற்றுக்குள் இறங்கி அருணையும், சூர்யாவையும் உயிருடன் மீட்டனர்.
இதில் செடிகளுக்கு இடையில் சிக்கிய தினேஷ் குமாரை சடலமாக மீட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்