search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரடைப்பால் இறந்த கண்டக்டர் கோபிநாத்
    X
    மாரடைப்பால் இறந்த கண்டக்டர் கோபிநாத்

    டிக்கெட் எடுக்காத காவலருடன் வாக்குவாதம் - பணியின்போது பஸ் கண்டக்டர் மரணம்

    கடலூர் அருகே டிக்கெட் எடுக்காத காவலருடன் இன்று வாக்குவாதம் செய்த பஸ் கண்டக்டர் மாரடைப்பால் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கடலூர் அருகே அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் கண்டக்டர் கோபிநாத் பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார்.

    பஸ்சில் சாதாரண உடையில் இருந்த காவலர் பழனிவேலிடமும் டிக்கெட் எடுக்கும்படி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது திடீரென கோபிநாத் மயங்கி விழுந்தார். அருகிலிருந்தோர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 

    தகவலறிந்த போலீசார் காவலர் பழனிவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×