என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரஷ்யாவில் தமிழக வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்
Byமாலை மலர்2 Sep 2019 8:21 AM GMT (Updated: 2 Sep 2019 8:21 AM GMT)
ரஷ்யாவில் தொழில் செய்வதற்காக சென்ற தமிழக வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் செந்தாமரை கண்ணன் (22). ரஷ்யாவில் தொழில் செய்வதற்காக சென்றார். ரூ.3 லட்சம் எடுத்து சென்றார்.
அங்குசென்ற பின் பணத்தை டாலராக மாற்ற முயற்சித்தார். அவருக்கு உதவி செய்வதாக கூறி பஞ்சாப், கேரளா, மற்றும் தமிழகத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் முன்வந்தனர்.
செந்தாமரை கண்ணனை அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். அவர் தர மறுக்கவே தாக்கியுள்ளனர். அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்தார்.
வெளிநாட்டில் இந்தியாவை சேர்ந்த வாலிபர்களே இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளித்துள்ளது. பாஸ்போர்ட், விசாகையில் இருந்ததால் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பினார்.
பணம் பறித்த வாலிபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தாமரை கண்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பறித்துச் சென்ற வாலிபர்களின் பெயர் விவரங்களை கேட்டனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் செந்தாமரை கண்ணன் (22). ரஷ்யாவில் தொழில் செய்வதற்காக சென்றார். ரூ.3 லட்சம் எடுத்து சென்றார்.
அங்குசென்ற பின் பணத்தை டாலராக மாற்ற முயற்சித்தார். அவருக்கு உதவி செய்வதாக கூறி பஞ்சாப், கேரளா, மற்றும் தமிழகத்தை சேர்ந்த 5 வாலிபர்கள் முன்வந்தனர்.
செந்தாமரை கண்ணனை அழைத்து சென்று ஒரு அறையில் அடைத்து அவரிடம் இருந்த பணத்தை பறித்தனர். அவர் தர மறுக்கவே தாக்கியுள்ளனர். அவர் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்தார்.
வெளிநாட்டில் இந்தியாவை சேர்ந்த வாலிபர்களே இத்தகைய சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளித்துள்ளது. பாஸ்போர்ட், விசாகையில் இருந்ததால் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்பினார்.
பணம் பறித்த வாலிபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த செந்தாமரை கண்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பறித்துச் சென்ற வாலிபர்களின் பெயர் விவரங்களை கேட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X