என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ரெயிலில் சிறுமியிடம் சில்மிஷம்: கைதான வாலிபர் ஜெயிலில் அடைப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் கடியப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 30). இவர் கனடாவில் பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வர முடிவு செய்தார். இதற்காக அவர் கனடாவில் இருந்து விமானம் மூலம் நேற்றுமுன்தினம் சென்னை வந்து சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து மாலையில் சென்னையில் இருந்து நாகர்கோவில் வரும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வந்தார்.
அந்த ரெயில் நேற்று அதிகாலை கோவில்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது மனோஜ் பயணம் செய்த ரெயில் பெட்டியில் இருந்த 8 வயது பெண் குழந்தை திடீரென அழுதது. குழந்தையிடம் விசாரித்தபோது மனோஜ் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தது.
இதனால் குழந்தையின் பெற்றோரும், சக பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மனோஜை கண்டித்து அவரை நாகர்கோவில் ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மனோஜை கைது செய்தனர்.
பின்னர் பூதப்பாண்டி கோர்ட்டில் மனோஜ் ஆஜர்படுத்தப்பட்டு நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்த சமயத்தில் மனோஜ் சில்மிஷத்தில் ஈடுபட்டு கைதான சம்பவம் நாகர்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்