search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    திருமங்கலம் அருகே ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

    திருமங்கலம் அருகே காதலி இறந்த சோகத்தில் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் பாலச்சந்திரன் (வயது19). வெள்ளாகுளம் கிராமத்தில் சலூன் கடை வைத்துள்ளார்.

    இவர் ராஜபாளையத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    இதனால் பாலச்சந்திரன் ஒரு மாத காலம் சோகத்தில் இருந்தார். கடந்த வாரம் தன்னுடைய கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுதொடர்பாக பாலச்சந்திரனை பெற்றோர் சமாதானம் செய்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை வெள்ளாங்குளம் எதிரே உள்ள ரெயில் தண்டவாளத்தில் செங்கோட்டையில் இருந்து மதுரை செல்லும் ரெயில் முன் பாய்ந்து பாலச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டார்.

    விருதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×