search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்வு
    X
    தேர்வு

    குரூப்-4 தேர்வு: குமரியில் 45,530 பேர் எழுதுகிறார்கள்

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப்-4 தேர்வு குமரி மாவட்டத்தில் நாளை 149 மையங்களில் நடக்கிறது. தேர்வை 45 ஆயிரத்து 530 பேர் எழுதுகிறார்கள்.
    நாகர்கோவில்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் குரூப்-4 தேர்வு குமரி மாவட்டத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 149 மையங்களில் நடக்கிறது. தேர்வை 45 ஆயிரத்து 530 பேர் எழுதுகிறார்கள். நாகர்கோவிலில் டி.வி.டி. பள்ளி, இவான்ஸ் பள்ளி, டதி பள்ளி, எஸ்.எல்.பி. பள்ளி உள்பட வேறு பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

    தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு மையத்துக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதற்காக 23 நடமாடும் குழுக்கள் மற்றும் 19 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க போலீசாரும் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் ஒரு ஆய்வு அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.

    Next Story
    ×