search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண் மாயம்
    X
    பெண் மாயம்

    திருவையாறு அருகே தாய்-மகன் மாயம்

    திருவையாறு அருகே தாய்-மகன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவையாறு:

    திருவையாறு அடுத்த மருவூர் மெயின்ரோட்டை சேர்ந்த ஆனந்தகுமார் மனைவி வசந்தி (வயது29). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஆனந்தகுமார் வெளிநாட்டில் வேலை பார்த்துவருகிறார். வசந்தி தன் பெற்றோருடன் மேலத்திருப்பூந்துருத்தியில் வசித்துவருகிறார்.

    இந்தநிலையில் கடந்த 21-ந்தேதி என்னை யாரும் தேடவேண்டாம், நான் அனாதை ஆசிரமத்திற்கு போகிறேன் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மகனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாராம். எங்கு தேடியும் கிடைக்காததால், வசந்தியின் தந்தை முருகேசன் நடுக்காவேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்கு பதிவு செய்து வசந்தியும், அவரது மகனையும் தேடிவருகின்றனர்.

    Next Story
    ×