search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    களக்காடு அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    களக்காடு அருகே வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பண்டாரம் மகன் கலைசெல்வன் (வயது 30). இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 7 வயதில் பாலமுருகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கலைசெல்வனுக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்லாமல் தினசரி மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வருவது வழக்கம்.

    சம்பவத்தன்று மது அருந்தி விட்டு போதையில் வீட்டிற்கு வந்த கலைசெல்வனை அவரது மனைவி இசக்கியம்மாள் கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு எழுந்துள்ளது. பின்னர் வயலுக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற கலைசெல்வன் வயலில் வி‌ஷம் குடித்து மயங்கினார். இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இறந்தார்.

    இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×