என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்காத 69490 பேருக்கு நோட்டீஸ்
Byமாலை மலர்31 Aug 2019 7:46 AM GMT (Updated: 31 Aug 2019 10:58 AM GMT)
சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்காத 69490 கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த செயல்பாடுகளை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், மற்ற இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.
“சென்னையில் 1,62,284 கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு நல்ல நிலையில் உள்ளது. இதுவரை மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காத 69490 கட்டிடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதத்திற்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை அமைக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மழைநீரி சேகரிப்பு கட்டமைப்பில் சிறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டிய 38507 கட்டிடங்களில், ஒரு வாரத்திற்குள் மழைநீர் சேகரிப்பை அமைத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் ஆணையர் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் 3 மாதங்களுக்குள் மழைநீர் சேகரிப்பு அமைப்பை நிறுவ வேண்டும் அரசு உத்தரவிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த செயல்பாடுகளை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, பல்வேறு பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்பட்டதன் விளைவாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 4 அடி அளவுக்கு உயர்ந்துள்ளதாகவும், மற்ற இடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைப்பதற்கான பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.
மேலும் மழைநீரி சேகரிப்பு கட்டமைப்பில் சிறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டிய 38507 கட்டிடங்களில், ஒரு வாரத்திற்குள் மழைநீர் சேகரிப்பை அமைத்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றும் ஆணையர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X