search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இளம்பெண் மாயம்
    X
    இளம்பெண் மாயம்

    சித்தோடு பகுதியில் இளம்பெண் உள்பட 2 பேர் மாயம்

    சித்தோடு பகுதியில் இளம்பெண் உள்பட 2 பேர் திடீரென மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சித்தோடு:

    பவானி அருகிலுள்ள சித்தோடு கங்காபுரம் ஆயபாடி பகுதியைச் சேர்ந்த அருளானந்தம் மனைவி கார்த்திகா வயது (வயது 25) இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த 24 -ந் தேதி இரவு கணவன் மகன் ஆகியோருடன் உறங்கிக் கொண்டிருந்த இவர் மறுநாள் காலை முதல் காணவில்லை இதுகுறித்து கணவர் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் மனைவி கிடைக்காததால் சித்தோடு போலீஸ் நிலையத்தில் அருளானந்தம் புகார் அளித்துள்ளார்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் காணாமல் போன கார்த்திகாவை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    அதேபோல் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த சம்சாட் வயது (வயது 28) காலிங்கராயன் பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த 8- ம் தேதி மேற்கு வங்காளம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மேற்கு வங்காளம் செல்லாமல் மாயமாகியுள்ளார்.

    இது குறித்து அவரின் அண்ணன் குறித்து சித்தோடு போலீசார் இடம் நேற்று அளித்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்கு பதிவு செய்து மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×