search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வில்லியனூரில் தனியார் நிறுவன மானேஜர் வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது

    வில்லியனூரில் தனியார் நிறுவன மானேஜர் வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் - ஒதியம்பட்டு ரோடு மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 44). இவர் புதுவையில் தனியார் இருசக்கர வாகன விற்பனை ஷோரூமில் மானேஜராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவியும் புதுவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று காலை வழக்கம்போல் கணவன் - மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் வைத்திருந்த 5¾ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகும்.

    இதுகுறித்து ஜான்சன் வில்லியனூர் பேலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஜான்சனின் வீட்டில் புகுந்து நகையை திருடியது ஒதியம்பட்டு  சேர்ந்த மனோஜ் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோஜை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×