search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தர்மபுரியில் தனியார் கம்பெனி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

    தர்மபுரியில் தனியார் கம்பெனி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாரதிபுரம் அடுத்துள்ள விவேகானந்தா தெருவைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராக  பணியாற்றி வந்தார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், மவுலி சரண் என்ற மகனும் உள்ளனர். முரளிதரனுக்கு அடிக்கடி குடிப்பழக்கம் இருந்து வந்தது. 

    இந்நிலையில் கடந்த 24-ந் தேதி ஒகேனக்கல்லில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு முரளிதரன் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சென்றிருந்தனர். பின்னர் வேலையின் காரணமாக முரளிதரன் மட்டும் பாரதிபுரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தார்.

    இந்த நிலையில் முரளிதரன் கடந்த 26-ந் தேதி அவரது உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எனக்கு வாழ பிடிக்கவில்லை என மது குடித்துவிட்டு பேசினார். நேற்று காலை முரளிதரன் அவரது வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து முரளிதரன் உறவினர்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முரளிதரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து என்ன காரணத்திற்காக முரளிதரன் தற்கொலை செய்து கொண்டார்? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×