என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருபுவனை அருகே அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று பெண் தற்கொலை
திருபுவனை:
திருபுவனை அருகே திருபுவனை பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம்., லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (வயது56). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணமாகி விட்டது.
இதற்கிடையே கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சண்முகத்தின் மகன் மாயமாகி விட்டார். மகன் மாயமானது முதல் ராணி சோகத்துடன் இருந்து வந்தார்.
இதனால் ராணிக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. மகள்களுக்கு திருமணமாகி அவர்கள் கணவர் வீட்டில் வசித்து வந்த நிலையில் சண்முகம் லாரி வேலைக்கு செல்வதால் ராணியை கவனித்து கொள்ள யாரும் இல்லை. இதனால் அவர் விரக்கதியில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று ரத்த அழுத்த நோய் போக்குவதற்கான வீட்டில் வைத்திருந்த 30 மாத்திரைகளை ராணி தின்று விட்டார்.
அன்று இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய சண்முகம் வீட்டில் ராணி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராணி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் சீனுவாசன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்