search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி
    X
    இந்திய கம்யூனிஸ்டு கட்சி

    பால் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம்

    பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பூதலூர்:

    பூதலூர் ஒன்றியம் சானூரப்பட்டி கடைவீதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் குமார், தஞ்சை மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம், பூதலூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முகில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக செங்கிபட்டி மேலத்தெருவில் புதிய கிளை அமைப்பு கொடியேற்று விழா நடைபெற்றது. கிளைச் செயலாளர் சங்கர் தலைமை வகித்தார். கட்சிகொடியை தமழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநில செயலாளர் குமார் ஏற்றி வைத்தார். மேலத்தெரு கிளை நிர்வாகிகள் ராமசங்கர். வீரமணி, சரவணன், சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×