search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீப்பிடித்து எரியும் குடிசை வீட்டை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் காட்சி.
    X
    தீப்பிடித்து எரியும் குடிசை வீட்டை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் காட்சி.

    குடிசை வீட்டில் தீப்பற்றியது: ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

    தர்மபுரியில் குடிசை வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    பாலக்கோடு:

    தர்மபுரி மாவட்டம் செங்கோடப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி மகன் சக்திவேல் (40). கூலித் தொழிலாளியான இவரின் குடிசைவீட்டில் கேஸ் சிலின்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென 100 அடி உயரத்திற்க்கு தீ பிளம்பு கிளம்பியது. இதையடுத்த அருகில் குடியிருந்த மனோகரன் (61) ராஜீ (65) ஆகியோரின் குடிசை வீட்டிற்கும் தீ மளமளவென பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தண்ணீர் மூலம் தீயைஅணைக்க முற்பட்டனர். தீ அதிக அளவில் பரவியதால் பாலக்கோடு தீயணைப்பு துறையிறனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்துவந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த தங்க நகைகள் 7 சவரன், பணம் 72 ஆயிரம், இரு சக்கரவாகனம் வீட்டில் இருந்த நிலப்பத்திரம், பீரோ, கட்டில், தட்டு, முட்டு சாமன்கள் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின.

    இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    Next Story
    ×