search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி தாக்குதல்
    X
    தொழிலாளி தாக்குதல்

    சங்கரன்கோவில் அருகே தொழிலாளி மீது தாக்குதல் - 2 பேர் கைது

    சங்கரன்கோவில் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள சீவலராயநேந்தல் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி மகன் மாரிச்சாமி (வயது30), கூலித்தொழிலாளி. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த  மணிகண்டன் (32) என்பவருக்கும் இடையே நடைபாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்தது.

    சம்பவத்தன்று மாரிச்சாமி வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் செல்போன் டார்ச்சால் மாரிச்சாமி முகத்தில் அடித்துள்ளார். இதனை அவர் தட்டி கேட்டதும் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், சீனிபாண்டியன் (45) மற்றும் துர்கா தேவி ஆகியோர் சேர்ந்து மாரிச்சாமியை சரமாரியாக அடித்து உதைத்தனர்.

    இதில் காயம் அடைந்த அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று மணிகண்டன், சீனிபாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள துர்கா தேவியை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×