என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொக்காபுரம் அருகே மலைகிராம சாலையை சீரமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் சோலூர் பேருராட்சியில் உள்ள பொக்காபுரம் அருகே தொட்டலிங்கி மலை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அதிகளவில் மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த பகுதிக்கு செல்ல தொட்டலிங்கி-மேல் தக்கல் சாலை உள்ளது. ஆனால் வாகன வசதி கிடையாது. இதனால் இங்குள்ளவர்களுக்கு போதிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. மேலும் இங்குள்ள குழந்தைகள் படிக்க வேண்டும் என்றால் சுமார் 7 கி.மீ. நடந்து சென்று தான் படிக்க வேண்டும்.
இதனால் ஒரு சில பெற்றோர் மட்டுமே தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். சில பெற்றோர் வாகன வசதி இல்லாததால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் உள்ளனர்.
தற்போது இந்த சாலை மிகவும் மோசமடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையிலும், மின்விளக்குகள் எரியாத நிலையிலும் உள்ளது.
மேலும் இந்த பகுதியில் இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இந்த சாலையை சீரமைத்து வாகன வசதி ஏற்படுத்தி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்