search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    திருப்பூரில் அரிசி மண்டி ‌ஷட்டரை உடைத்து ரூ. 9 லட்சம் பணம் திருட்டு

    திருப்பூரில் அரிசி மண்டி ஷட்டரை உடைத்து ரூ.9 லட்சம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம் புதூரில் வசித்து வருபவர் சண்முகம் (36). இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் அரிசி மண்டி வைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதனை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு 10 மணிக்கு சண்முகம் அரிசி மண்டியில் வசூலான ரூ. 3 லட்சத்தை இன்று வங்கியில் கட்டுவதற்காக மண்டியில் இருந்த மேஜையில் வைத்து பூட்டினார்.

    பின்னர் சாவியை மண்டியின் ஒரு பகுதியில் வைத்து விட்டு ‌ஷட்டரை பூட்டி விட்டு மேல் மாடியில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை மண்டியை திறக்க வந்தார். அப்போது ‌ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது மேஜை திறக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 9 லட்சத்தை காணவில்லை. அதனை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து அனுப்பர் பாளையம் போலீசில் சண்முகம் புகார் செய்தார். போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    சண்முகம் தனது அரிசி மண்டியை பூட்டி விட்டு செல்லும் போது மண்டி மேலாளர் மற்றும் லோடு மேன் மட்டுமே இருந்துள்ளனர். அவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அரிசி மண்டியில் ரூ. 9 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×