search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை திருமணங்கள்
    X
    குழந்தை திருமணங்கள்

    திண்டுக்கல் அருகே 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

    திண்டுக்கல் அருகே நடக்க இருந்த 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகில் உள்ள கூவக்காபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற வாலிபருக்கும் நேற்று திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்துக்கு சென்ற அதிகாரிகள் திருமண ஏற்பாடுகளை தடுத்து நிறுத்தினர். மேலும் இரு தரப்பு பெற்றோர்களையும் எச்சரித்த அதிகாரிகள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவில் இன்று ஆஜராக வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

    இதேபோல் நத்தம் அருகில் உள்ள பெரியமலையூர் கிராமத்தை சேர்ந்த 9-ம் பயிலும் 13 வயது மாணவிக்கும், ஒரு வாலிபருக்கும் பெற்றோர் ஏற்பாட்டின் பேரில் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. இது குறித்து வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    மேலும் இதுபோன்ற திருமணம் நடத்துபவர்களும் அவர்களுக்கு துணை புரிபவர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார் என எச்சரித்து அவர்களையும் குழந்தைகள் நலக்குழுவில் ஆஜராக உத்தரவிட்டனர்.

    Next Story
    ×