search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    திருச்சியை குளிர்வித்த தொடர் மழை

    திருச்சியை குளிர்வித்த தொடர்ந்து சாரல் மழைபெய்யத் தொடங்கியது.

    திருச்சி:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. அதன்படி திருச்சி அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஸ்ரீரங்கம், முசிறி, குளித்தலை, மண்ணச்சநல்லூர், உறையூர், உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 4 நாள்களாக அவ்வப்போது மிதமாகவும், கனமழையும் பெய்து வருகிறது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. நண்பகல் வேளையில் வெயிலின் தாக்கம் மிதமாக காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாலை 4 மணிக்கு மேல் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து காட்சியளித்தது. தொடர்ந்து சாரல் மழைபெய்யத் தொடங்கியது.

    பின்பு சில நிமிடங்கள் மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையம், கேகேநகர், கண்டோன்மெண்ட், தென்னூர் சாஸ்திரி சாலை, தில்லைநகரில் நல்ல மழை பெய்து மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ந்த காற்று வீசியதால் திருச்சி மாநகரமே குளிர்ந்து காணப்பட்டது.

    Next Story
    ×