என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்த போது மின்சாரம் தாக்கியதில் மின் ஊழியர் பலி
Byமாலை மலர்26 Aug 2019 7:46 AM GMT (Updated: 26 Aug 2019 7:46 AM GMT)
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் இறந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலிவலம்:
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் மாறாடி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 38).இவர் வெங்கடாசலபுரம் மின்வாரிய அலுவலகத்தில் வயர்மேனாக பணியாற்றி வந்தார்.
நேற்றிரவு உப்பிலியபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதையடுத்து,அதனை சரி செய்யும் பணியில் குமார் ஈடுபட்டார். அப்போது உயர்மின் அழுத்தம் காரணமாக அவரை மின்சாரம் தாக்கியது.இதில் தூக்கி வீசப்பட்ட குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X