என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூரில் தியேட்டரில் தீ விபத்து - ரசிகர்கள் ஓட்டம்
Byமாலை மலர்26 Aug 2019 3:17 AM GMT (Updated: 26 Aug 2019 3:18 AM GMT)
மதுரை மேலூரில் சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பகுதியில் 3 தியேட்டர்களுடன் கூடிய வளாகம் உள்ளது. தரைத்தளத்தில் 2 தியேட்டர்களும், 2-வது தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தியேட்டரும் உள்ளன. முதல் தளத்தில் கடைகள் உள்ளன. நேற்று பகல் காட்சி 3 தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டு இருந்தது.
சினிமா இடைவேளையின்போது, அந்த தியேட்டரில் கடைகள் செயல்படும் முதல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. குளிர்சாதன கருவிகளுக்கான மின்சப்ளை செய்யும் அறையில் தீப்பிடித்து, அந்த அறையில் கிடந்த பழைய இருக்கைகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே ஊழியர்கள் 3 தியேட்டர்களிலும் காட்சிகளை நிறுத்திவிட்டு, அனைத்து அவசர வழிகளையும் திறந்துவிட்டனர். இதையடுத்து ரசிகர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
இதையடுத்து அங்கிருந்த தீயணைக்கும் கருவிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தியேட்டரில் எரிந்த தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக மேலூர் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தியேட்டரின் முதல் தளத்தில் இருந்த மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்தை தொடர்ந்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அந்தந்த காட்சிக்குரிய பணத்தை ரசிகர்களிடம் தியேட்டர் நிர்வாகம் திரும்ப வழங்கியது.
மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பகுதியில் 3 தியேட்டர்களுடன் கூடிய வளாகம் உள்ளது. தரைத்தளத்தில் 2 தியேட்டர்களும், 2-வது தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தியேட்டரும் உள்ளன. முதல் தளத்தில் கடைகள் உள்ளன. நேற்று பகல் காட்சி 3 தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டு இருந்தது.
சினிமா இடைவேளையின்போது, அந்த தியேட்டரில் கடைகள் செயல்படும் முதல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. குளிர்சாதன கருவிகளுக்கான மின்சப்ளை செய்யும் அறையில் தீப்பிடித்து, அந்த அறையில் கிடந்த பழைய இருக்கைகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனே ஊழியர்கள் 3 தியேட்டர்களிலும் காட்சிகளை நிறுத்திவிட்டு, அனைத்து அவசர வழிகளையும் திறந்துவிட்டனர். இதையடுத்து ரசிகர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
இதையடுத்து அங்கிருந்த தீயணைக்கும் கருவிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தியேட்டரில் எரிந்த தீயை அணைத்தனர்.
இதுதொடர்பாக மேலூர் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தியேட்டரின் முதல் தளத்தில் இருந்த மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்தை தொடர்ந்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அந்தந்த காட்சிக்குரிய பணத்தை ரசிகர்களிடம் தியேட்டர் நிர்வாகம் திரும்ப வழங்கியது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X