என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கருமத்தம்பட்டியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
கோவை:
கோவை கருமத்தம் பட்டியை சேர்ந்தவர் கணேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் துர்கா (வயது 19). கல்லூரிக்கு சென்ற இவர் போதிய வசதி இல்லாததால் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். இந்தநிலையில் துர்காவுக்கு கையில் கட்டி ஏற்பட்டது. வலியால் துர்கா அவதிப்பட்டு வந்தார். தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு பெற்றோரிடம் கூறினார். ஆனால் பெற்றோர் வேறு வேலையில் இருந்ததால் துர்காவை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்வதில் தாமதமானது.
இதனால் விரக்தியடைந்த துர்கா சம்பவத்தன்று விஷம் குடித்தார். மயங்கி கிடந்த அவரை பெற்றோர் மீட்டு சோமனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துர்கா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்