என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ஒட்டன்சத்திரத்தில் ரெயில் முன் பாய்ந்து முதியவர் தற்கொலை
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையம் அருகே 55 வயது மதிக்கத்தக்க நபர் சுற்றித் திரிந்துள்ளார். காலை 7.15 மணியளவில் சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரெயில் ஒட்டன்சத்திரம் வந்தது. அங்கிருந்து புறப்பட்ட போது திடீரென முதியவர் ரெயில் முன் பாய்ந்தார்.
இதில் கை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற பயணிகள் இது குறித்து பழனி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ்காரர் செந்தில் விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் இறந்தவர் மொட்டையடித்துள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சினையா என தெரியவில்லை.
இறந்த நபர் யார்? எந்த ஊர்? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்