search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொழிலாளி மாயம்
    X
    தொழிலாளி மாயம்

    தஞ்சையில் தொழிலாளி மாயம்

    தஞ்சையில் தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கீழவாசலை சேர்ந்தவர் செந்தில் (வயது 37). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் வேலை செய்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர் வெளியே செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் செந்திலை தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செந்திலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×