என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மணலியில் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: மின்வாரிய ஊழியர் கைது
திருவொற்றியூர்:
மணலி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் எழில் மற்றும் காவலர் ஜெகன் ஆகியோர் மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எண்ணூரைச் சேர்ந்த மின் ஊழியர் மணிமாறன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மடக்கி சோதனையிட்டபோது அவர் மது அருந்தி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது மணிமாறன் தனது நண்பரான மின் வாரிய ஊழியர் பன்னீர் செல்வத்துக்கு போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்தார்.
பின்னர் இருவரும் போலீசாரிடம் வழக்கு போடக் கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் எழிலுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுபற்றி சப்- இன்ஸ்பெக்டர் எழில் மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்