search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    என்.ஜி.ஒ. காலனி அருகே விபத்து - மெக்கானிக் பலி

    என்.ஜி.ஒ. காலனி அருகே விபத்தில் மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    என்.ஜி.ஒ.காலனி:

    ஈத்தாமொழியை அடுத்த நங்கூரன்பிலாவிளையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது23). ஏ.சி. மெக்கானிக் வேலை செய்து வந்தார்.

    கார்த்திக் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். என்.ஜி.ஒ. காலனி அருகே சென்ற போது எதிரே அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ்வரன் என்பவர் இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

    இதில் கார்த்திக் தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று நள்ளிரவு கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது பற்றி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×