search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    தாராபுரம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளி பலி

    தாராபுரம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). கட்டிட தொழிலாளி.

    இவர் தினமும் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாராபுரத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து பஸ்சில் சென்று பல்லடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்களில் தாராபுரம் நோக்கி வந்தார். கொண்டரசம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே தாராபுரத்தில் இருந்து மடத்துக்குளம் நோக்கி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று வந்தது.

    இதில் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×