என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தாராபுரம் அருகே விபத்து- கட்டிட தொழிலாளி பலி
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சோமனம் பகுதியை சேர்ந்தவர் முருகன்(வயது 35). கட்டிட தொழிலாளி.
இவர் தினமும் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாராபுரத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து பஸ்சில் சென்று பல்லடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்தார். வழக்கம் போல் இன்று காலை வேலைக்கு செல்வதற்காக தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்களில் தாராபுரம் நோக்கி வந்தார். கொண்டரசம்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே தாராபுரத்தில் இருந்து மடத்துக்குளம் நோக்கி கோவிலுக்கு செல்வதற்காக பயணிகளை ஏற்றி கொண்டு வேன் ஒன்று வந்தது.
இதில் கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியது. இதில் முருகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தாராபுரம் இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்