என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்23 Aug 2019 5:12 PM GMT (Updated: 23 Aug 2019 5:12 PM GMT)
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:
முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் மாவட்ட தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் ஜான்அசோக் வரதராஜன் முன்னிலை வகித்தார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. போலீசார் கைது செய்ததை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக ப.சிதம்பரத்தை விடுதலை செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேல், மாவட்ட பொருளாளர் ஆசைத்தம்பி, பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X