search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    தர்மபுரியில் மது விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

    தர்மபுரியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தனமாக மது விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில், தர்மபுரி மாவட்டம் முழுவதும் உள்ள போலீசார் கள்ளத்தனமாக மது விற்பவர்களை கைது செய்ய ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது ஏ.பள்ளிப்பட்டி போலீசார் அதே பகுதியை சேர்ந்த கல்யாணி என்பவரை மது விற்றதன் பேரில் கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். 

    இதேபோன்று கோட்டப்பட்டி போலீசார் அரூர் அடுத்துள்ள புதுவளவு கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×