என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நொய்யல் அருகே தொழிலாளி மாயம்
Byமாலை மலர்23 Aug 2019 2:27 PM GMT (Updated: 23 Aug 2019 2:27 PM GMT)
நொய்யல் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய தொழிலாளி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம்பாளையம்:
நொய்யல் அருகே மரவாபாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). இவர் காகித ஆலையில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராஜேந்திரன் எதுவும் சொல்லாமல் வெளியூர் சென்று விட்டு ஒரு மாதம் கழித்து வீடு திரும்புவது வழக்கம்.
அதே போல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மல்லிகாவிடம் தகராறு செய்து கொண்டு, வேலாயுதம்பாளையம் செல்லும் பஸ்சில் ஏறி ராஜேந்திரன் சென்றுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதனால் மல்லிகா, உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் மாயமானது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X